Thursday, February 18, 2010

ஆறாக கடலாக !

நேற்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு என் அலுவலகத்தில் பனி புரியும் ஐந்து சாகாக்களுடன் மது அருந்த சென்றிருந்தேன். நான் லெமன் ஜூஸ் பார்ட்டி. ஒரு ரவுண்டு போன பின்பு அனைவரின் வாயின் முலமாக வந்த மனதின் வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

போன இடம்- பேரூர் அருகே ஆளில்லாத காட்டுக்குள் ஒரு தனிமையான ரெசொர்ட். ஏதோ சுற்றுலா போனது போல் ஒரு அனுபவம். அதனால் என்னவோ தலைப்பு அங்கு இருந்து பிறந்தது.

நம் கல்லூரி நாட்களில் சென்ற சுற்றுலா தான், அனைவராலும் மறக்க முடியாத கடந்த காலம் . ஒவ்வொருவரும் அவர்கள் சென்ற சுற்றுலா பத்தி பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் மறக்கமுடியாத, மறக்க விரும்பர சுற்றுலாகளும் உண்டு. ஏன் கல்லூரி சுற்றுலாக்கு மட்டும் இந்த சிறப்பு.

அந்த வயதில் நண்பர்கள் , பெண் , இயற்கை இந்த மூன்றை தவிர வேற எண்ணம் வருவது அரிதுதானே. நிரந்தர உண்மை இம்முன்று மட்டும் தானே! அப்போது இருந்த உயிர் துடிப்பு ஓடும் ஆறு போல.

நம் வாழ்கையை ஓடும் ஆறு போல் அமைத்துக்கொள்வதும் , கடல் என்ற முதிர்ச்சியை எப்போது அடையவேண்டும் என்று தீர்மானிப்பது நம்மிடம் தான் உள்ளது.

கல்லூரி காலத்தில் நாம் சிரித்ததை நினைத்து பார்த்தல் இப்போது அழுகை வரும். அப்போது அழுதவைக்கு இப்போது சிரிப்பு வரும் - வைரமுத்து.

ஆறு நிக்காதல்லவா !

நன்றி.

1 comment:

theja amma said...

கல்லூரி காலத்தில் நாம் சிரித்ததை நினைத்து பார்த்தல் இப்போது அழுகை வரும். அப்போது அழுதவைக்கு இப்போது சிரிப்பு வரும் - வைரமுத்து.
mutrilum unmayaana vaira varigal