Friday, July 11, 2014

why?


why? 

the most powerful word i have known is 'why'. In your flow of life, if you didn't ask this question in anywhere to anybody, you are on track. you will not been mistaken, its simple to follow and vanish. But once you started to ask this 'why', then your life start transforming. The difference between why and why not is a thin line, but that matters the most. Every human beings in this planet can live only one kind of life. Crave - Have - Fight - Play - Crave

as usual a small story,
a small boy who was living in a plain land was bored of his daily routine, daily morning and evening he will see the pelican birds jumping from the top of the hill and jump down narrow into the sea. somehow somewhere he decided to stop living the routine mono life and planned to climb up the hill and jump into the sea from top. after a huge struggle he started to climb. of course it was not easy. Fall, scratch, threat, fear of unknown, day by day he got strong and he self motivated himself to reach the top, one night around 3am, he reached the top of the hill. dead silence, he got terribly upset,
 ''oh no, i am all alone here, no one can understand me, i suffered in down plain, i took all the pain to reach up believing i will feel something better up here, but NO. its nothing here, i quit. i am going to kill myself ''
When he took his knife to cut his throat, a grey white pelican came in front of him, 
' hey one minute, may i know why you are killing yourself!! he explained everything. ohh like that, but from your story i understood that you came here to jump down into the sea, why you didn't do that!  He replied 'i felt nothing here, i was left alone', pelican ' i didnt ask that, i asked why didn't you do for what you came here for'!! he remained silent. 
pelican asked ' wait for another three hours, close your eyes till that, when i whistle just jump from this rock, you will die easily. okay!! he agreed. 

he remained silent and still with closed eyes, slowly he felt the warmth of the rising sun, he heard the whistle sound, in urge to die, he jumped from the rock, he is flying.
When he opened his eyes, he was flying down with hundreds of pelicans,like a missile,  squashed in to the sea, entire village in the plains clapped for him, because everyone there wanted to do this, but many didn't, few cant. They treated him as the conqueror of their dreams.

He raised high from the sea and swim towards the shore, he felt the existence, with sun rising behind him and pelicans flying above him, now he understood the joy of living dangerously. 

Live Dangerously than dying comfortably. 





Wednesday, March 17, 2010

மிதக்கும் பெண்கள்

சிறு வயதில் இருந்து உங்களுக்கு இருப்பது போலவே எனக்கும் விமானத்தில் ஒரு முறையாவது போகவேண்டும் என்று ஆசை இருந்தது. வாய்ப்பு கிடச்சுது. பறக்க தயாரானேன்.

ஹைதராபாத்கு முதல் முறையாக விமானத்தில் சென்றிருந்தேன். விமானம் பக்கத்தில் இருந்து பார்பதற்கு எப்படி இருக்கும், உள்ளே எப்படி, சீட் எப்படி, டிவி இருக்குமா, போன்ற பல கேள்வியுடன் புரியாத புதிரா எனக்கு இருந்தது, விமான பணி பெண்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வேலை மிட்டாய் கொடுப்பது மட்டும் தானா? இல்லை முத்தமும் விமானத்துக்கு ஏற்ப மொத்தமும் கொடுப்பார்களா? என்று பல சந்தேகங்கள்.

இதோ என் அனுபவத்தில் புதிர்க்கான விடைகள்.

உள்ளே நுழையும் போது அழகு என்று சொல்லப்படும் தகுதி உடைய இரண்டு பெண்கள் அரக்கை சட்டையும், முட்டி தெரியும் படி பாவாடையும் அணிந்து வரவேற்றனர். இருக்கையில் அமர்ந்த பிறகு சிறிது நிமிடம் கழித்து, பெல்ட் போடும் படியும், அவசர கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பத்தியும் அக்கறையே இல்லாமல் போலி தனமாக நடித்து காண்பித்தார்கள். அவர்களுக்கு அலுப்பும் எனக்கு சிரிப்பும் வந்தது. பின்பு சீட் பெல்ட் போடும்படி அறிவுறுத்திய பின்பு விமானம் பறக்க ஆயுத்தமானது. பறந்தது.

பறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தள்ளு வண்டியை ஒரு "ஆண்" இழுத்து வரவும், அதில் அயல் நாட்டு குளிர் பானமும், பொட்டன சாப்பாடும் இருந்தது. ஒவ்வொரு வராக சென்று பணி பெண் என்ன வேண்டும் என்று கேட்டு வழங்கினால். மூணு மடங்கு விலை உயர்வுடன். பின்பு அனைவரையும் கவனித்து விட்டு அவசரமாக எதையோ வாயில் திணித்து கொண்டால். விமானம் தரை இறங்கியதும் மீண்டும் திருமண வீட்டு வரவேற்பு பெண்கள் போல நன்றி சொல்லி வழியனுப்பிவைத்தாள்.

நான் இறங்கிய பின்பு திரும்பி பார்த்தேன்.. அவர்களை, அவர்களும் திரும்பி பார்த்தார்கள்.. விமானத்தை.

விமானத்தில் இருந்து ஏர்போர்ட் போக ஒரு பஸ்சில் ஏற்ற பட்டேன். அப்போது தோணினது, நம்ம வீட்டு பக்கத்தில் இட்லி கடை வெச்சுருகக அன்னபூரணி அக்க பொண்ணு மட்டும் சிவப்பா, முக பரு இல்லாம தெளிவா இருந்துருந்தா, ஆங்கிலம் பேச பழகிருந்த, வெறும் கற்பனையில் மிதக்கும் சர்ராசரி பெண்ணாக இல்லாமல், ஆண்கள் வாய் பிளக்கும் மிதக்கும் பெண்ணாக ஆகிருப்பாள்.

சரி. அப்போ எனக்கு அன்போடு ரெண்டு ரூபாய்க்கு இட்லி பரிமாற யார் இருப்பா !

- தீபன்.

Thursday, February 18, 2010

ஆறாக கடலாக !

நேற்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு என் அலுவலகத்தில் பனி புரியும் ஐந்து சாகாக்களுடன் மது அருந்த சென்றிருந்தேன். நான் லெமன் ஜூஸ் பார்ட்டி. ஒரு ரவுண்டு போன பின்பு அனைவரின் வாயின் முலமாக வந்த மனதின் வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

போன இடம்- பேரூர் அருகே ஆளில்லாத காட்டுக்குள் ஒரு தனிமையான ரெசொர்ட். ஏதோ சுற்றுலா போனது போல் ஒரு அனுபவம். அதனால் என்னவோ தலைப்பு அங்கு இருந்து பிறந்தது.

நம் கல்லூரி நாட்களில் சென்ற சுற்றுலா தான், அனைவராலும் மறக்க முடியாத கடந்த காலம் . ஒவ்வொருவரும் அவர்கள் சென்ற சுற்றுலா பத்தி பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் மறக்கமுடியாத, மறக்க விரும்பர சுற்றுலாகளும் உண்டு. ஏன் கல்லூரி சுற்றுலாக்கு மட்டும் இந்த சிறப்பு.

அந்த வயதில் நண்பர்கள் , பெண் , இயற்கை இந்த மூன்றை தவிர வேற எண்ணம் வருவது அரிதுதானே. நிரந்தர உண்மை இம்முன்று மட்டும் தானே! அப்போது இருந்த உயிர் துடிப்பு ஓடும் ஆறு போல.

நம் வாழ்கையை ஓடும் ஆறு போல் அமைத்துக்கொள்வதும் , கடல் என்ற முதிர்ச்சியை எப்போது அடையவேண்டும் என்று தீர்மானிப்பது நம்மிடம் தான் உள்ளது.

கல்லூரி காலத்தில் நாம் சிரித்ததை நினைத்து பார்த்தல் இப்போது அழுகை வரும். அப்போது அழுதவைக்கு இப்போது சிரிப்பு வரும் - வைரமுத்து.

ஆறு நிக்காதல்லவா !

நன்றி.

என்னவென்று சொல்வதம்மா..

இன்று காலை விகடனில் பெரியார் பற்றி ஒரு குறிப்பு படித்தேன். என் தாயும், மணைவியும் இறந்தபோது நான் மகிழ்ச்சி கொண்டேன், எனக்கு இருந்த இரண்டு குடும்ப தொந்தறவுகளும் முடிந்தன, இனிமேல் பொதுவாழ்க்கையில் நான் சுதந்திரமாக ஈடுபடுவேன் என்றார்.

திருமணம் என்ற சம்ப்ரதாயம் மூலம் தனி மனிதனுக்கு ஏற்படும் துன்பமும், அடக்குமுறையும், ஒவ்வொருவரின் வாழ்கையையுமே பயனற்று செய்து விடுகிறது. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் வாழ்கையை எண்ணற்ற மகிழ்ச்சியாய் கழிக்கவேண்டியதை, ஒரு அறைக்குள் ஒரு பெண்ணுக்குள் முடிந்து விடுகிறது.

சக மனிதர்கள் மீதும், உயிர்கள் மீதும் அன்பும் அக்கறையும் இல்லாமல், தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்று மடியும் வாழ்க்கை எப்படி சரியாகும்.

குடும்பங்களற்று, உறவுகளற்று, எல்லைகளற்று, நோக்கமற்று இயற்கையிடம் இயற்கையாய் உறவாடும் சுகம் வேறெங்கு கிடைக்கும்.

திருமணம் ஆன யாரும் மகிழ்ச்சியா வாழ்வது இல்லை. அதை மீறி சிலர் நான் திருமண வாழ்கையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறுவார்கள். ஆதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று வெறும் வாய்பேச்சு, மற்றொன்று சந்தோஷத்தின் எல்லையை குறுகிக்கொண்டு வாழ்வது.

நான் மேல் கூறியவற்றை ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லி இருக்கலாம் அனால் இப்போது சொல்வது தான் சரி. காரணம் எனக்கு திருமணம் ஆகி ஒன்பது மாதங்கள் முடிவடைய போகிறது.

-தீபன்

Tuesday, February 16, 2010

தினமும் நூறு புத்தகங்கள் படிக்கிறேன்.

காலையில் தாமதமாக எழுவதில் இருந்து தொடங்குகிறது புரட்டல்கள். காலையில் இயந்திரத்தை விட வேகமாக வேலை பார்க்கும் என் தாயை பார்க்கும் போது பெண் அடிமைத்தனம் என்ற புத்தகத்தை தினமும் தவறாமல் படிக்கிறேன்.

என் தாய் செய்து வைத்திருக்கும் உணவை பார்க்கும் போது என் குலம், கோத்திரம், என் பாட்டியின் வாழ்க்கை என்ற குடும்ப வரலாறை படித்து முடித்து, அதை தொடர்ந்து நகரவாசிகளின் ஆரோகியமற்ற உணவு என்ற புத்கத்தை அனுபவித்து படிக்கிறேன்.

பின்னர் என் அழகான நிர்வாணத்தை ஆசிங்கமான ஆடைகளை கொண்டு மறைகையில், ஆடைகளுக்காக நம் கவனம், நிறம், அதன் முலமாக நம்மளை அடையாள படுதிக்கொள்கையில், ஆடைகளின் அரசியில் என்ற புத்தகத்தை படிக்கிறேன்.

வெளியில் சென்று ஆனைவரையும் பார்க்கும் போது, பணத்துக்காக இத்தனை போட்டிகளும் போரட்டங்களும் என்ற புத்தகத்தில் என்னை பற்றியும் ஒரு பக்கமுண்டு.


வேலைக்கு போகும் அனைவரின் வாழ்நாளும், அதிக சதவீகிதம்
அலுவலங்களில் தான் கழிகிறது. அங்கு நாம் என்ன வேலை, யாருக்காக எதற்காக செய்கிறோம், நாம் செய்யும் வேலை யாரையெல்லாம் பாதிக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாமலே வாழ்கை கடந்து செல்கிறது. அடியால் என்ற புத்தகத்தில் முக்கிய பங்கு எனக்கும் உண்டு.

பின்பு, மாலை நேரத்து மயக்கம், நாம் ஒவொருவரும் மாலை நேரத்தை எப்படி கழிகறோம். நகையாடும் படி உள்ளதல்லவா ! இயற்கை - மாலை - பெண். இந்த புத்தகத்தை படிபதற்கு எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு, ஆனால் வாசிபதற்கு புத்தகம் தான் இல்லை.

இரவு நேரத்தில் எதை உன்ன கூடாதோ அதை தேடி உண்டுவிட்டு, செயற்கை படுக்கைக்கு திட்டமிட்ட உறக்கத்திற்கு செல்லும் முன், இன்று நாள் எப்படி கடந்தது என்று பலர் யோசிக்க விரும்புவதில்லை. மீறி யோசித்தால் ......
வெற்றிடம் என்ற புத்தகம் உருவாகிறது.

கனவில் - ஆசைகள் கனவில் என்ற புத்தகம்.

மீண்டும் விடிகிறது.
படிபதற்கு புதிய புத்தகம் இல்லை.

- தீபன்.

Tuesday, August 19, 2008


sex. its the only word we need to learn, understand, practise, execute. in the whole thing in world every living beings live for food and sex. that is the need for everyone too. but the six sense animal is not satisfied with food and sex. he discovered few and invented a lot. what all invented by six sensed animal creates a lot and lot of problems which cause destroying human life.

amoung all the name sex had become a bad name. we are afraid to pronounse the word sex in public. male body structure and female body structure are designed to have sex comfortably. according to me, nothing is right and nothing is wrong in this world. do what ur mind says. dont listen to brain. its fully corrupted by the society.
feed ur brain naturally.
live with nature.
have sex naturally.