Tuesday, February 16, 2010

தினமும் நூறு புத்தகங்கள் படிக்கிறேன்.

காலையில் தாமதமாக எழுவதில் இருந்து தொடங்குகிறது புரட்டல்கள். காலையில் இயந்திரத்தை விட வேகமாக வேலை பார்க்கும் என் தாயை பார்க்கும் போது பெண் அடிமைத்தனம் என்ற புத்தகத்தை தினமும் தவறாமல் படிக்கிறேன்.

என் தாய் செய்து வைத்திருக்கும் உணவை பார்க்கும் போது என் குலம், கோத்திரம், என் பாட்டியின் வாழ்க்கை என்ற குடும்ப வரலாறை படித்து முடித்து, அதை தொடர்ந்து நகரவாசிகளின் ஆரோகியமற்ற உணவு என்ற புத்கத்தை அனுபவித்து படிக்கிறேன்.

பின்னர் என் அழகான நிர்வாணத்தை ஆசிங்கமான ஆடைகளை கொண்டு மறைகையில், ஆடைகளுக்காக நம் கவனம், நிறம், அதன் முலமாக நம்மளை அடையாள படுதிக்கொள்கையில், ஆடைகளின் அரசியில் என்ற புத்தகத்தை படிக்கிறேன்.

வெளியில் சென்று ஆனைவரையும் பார்க்கும் போது, பணத்துக்காக இத்தனை போட்டிகளும் போரட்டங்களும் என்ற புத்தகத்தில் என்னை பற்றியும் ஒரு பக்கமுண்டு.


வேலைக்கு போகும் அனைவரின் வாழ்நாளும், அதிக சதவீகிதம்
அலுவலங்களில் தான் கழிகிறது. அங்கு நாம் என்ன வேலை, யாருக்காக எதற்காக செய்கிறோம், நாம் செய்யும் வேலை யாரையெல்லாம் பாதிக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாமலே வாழ்கை கடந்து செல்கிறது. அடியால் என்ற புத்தகத்தில் முக்கிய பங்கு எனக்கும் உண்டு.

பின்பு, மாலை நேரத்து மயக்கம், நாம் ஒவொருவரும் மாலை நேரத்தை எப்படி கழிகறோம். நகையாடும் படி உள்ளதல்லவா ! இயற்கை - மாலை - பெண். இந்த புத்தகத்தை படிபதற்கு எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு, ஆனால் வாசிபதற்கு புத்தகம் தான் இல்லை.

இரவு நேரத்தில் எதை உன்ன கூடாதோ அதை தேடி உண்டுவிட்டு, செயற்கை படுக்கைக்கு திட்டமிட்ட உறக்கத்திற்கு செல்லும் முன், இன்று நாள் எப்படி கடந்தது என்று பலர் யோசிக்க விரும்புவதில்லை. மீறி யோசித்தால் ......
வெற்றிடம் என்ற புத்தகம் உருவாகிறது.

கனவில் - ஆசைகள் கனவில் என்ற புத்தகம்.

மீண்டும் விடிகிறது.
படிபதற்கு புதிய புத்தகம் இல்லை.

- தீபன்.

1 comment:

MuthuKumar said...

நல்ல பதிப்பு.... நெறய பெருக்கு இந்த புத்தகங்கள் இருக்கென்று தெரிவதில்லை. அதனால், வேறு புத்தகம் தேடவும் வழி இருப்பதில்லை....